திருப்பூரில் இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி பவுண்டைன் லைட் ஆர்டர் செய்தவருக்கு, வெறும் 30 ரூபாய் மதிப்பிலான நைட் லைட் அனுப்பி ஆல்லைன் நிறுவனம் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. விஜயாபுரத்தை சேர்ந்த ஜான்சன், ஆன்லைன் மூலமாக 799 ரூபாய்க்கு செயற்கை நீருற்று லைட் ஆர்டர் செய்த நிலையில், வெறும் 30 ரூபாய் மதிப்பிலான நைட் லைட் வந்திருப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்தார்.