கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் அருகே இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த நிலையில், சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கத்தில் எழுத்தாளராக பணியாற்றிய கிருஷ்ணன் மீது பைக் வேகமாக மோதியில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தியவர்களை கைது செய்யக் கோரி போராட்டம் நடைபெற்றது.