தொடர் விடுமுறை முடிந்து சென்னை,கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பொதுமக்கள் திரும்பிய நிலையில், ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுகிறதா? என சிவகங்கையில் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆம்னி பேருந்துகளை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்ததோடு, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என பயணிகளிடம் கேட்டறிந்தனர்.