தஞ்சாவூர் மாவட்டத்தில் கண்டியூர் சிவன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் அகற்றினர். கோயிலுக்கு சொந்தமான கடைகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்தவர்கள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாததோடு, இடத்தை காலி செய்யவும் மறுத்துள்ளனர். இது தொடர்பாக கோயில் நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரத்தை கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.