வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பெறப்படும் மனுக்களை உடனடியாக ஸ்கேன் செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மின்னஞ்சலில் அனுப்பப்படும் மனுக்களுக்கு அதன் மூலமாகவே பதில்களை பெற்று துரித நடவடிக்கை மேற்கொள்ளவும், மக்களின் கோரிக்கையை விரைவாக நிறைவேற்றவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.