புதுக்கோட்டையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 8 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், நாகையை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர். நாகையில் இருந்து அலெக்ஸ் என்ற இளைஞர் தனது காரில் ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, அவரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.