கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி இஞ்சின், ஜி.பி.எஸ். கருவி, 2 செல்போன் உள்ளிட்டவற்றை இலங்கை கடற் கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கடற் கொள்ளையர்கள் பறித்து சென்றதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.