தேனி மாவட்டம் மறவப்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்து வினோத வழிபாடு செய்தனர். 3 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் சாமி தரிசனம் மேற்கொண்டனர். இந்நிலையில் கடைசி நாள் நிகழ்வில், அக்கிராம மக்கள் துடைப்பத்தை சேறு மற்றும் சகதியில் நனைத்துக்கொண்டு ஒருவரையொருவர் அடித்து வழிபட்டனர்.