வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள லிஃப்ட் பாதியிலேயே பழுதாகி நின்றதால் அதில் சென்ற பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அவதிக்குள்ளாகினர். மூன்று தளங்கள் கொண்ட வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இரண்டு லிஃப்ட்டுகள் உள்ள நிலையில், இரண்டாவது லிஃப்ட் திடீரென பழுதாகி பாதியிலேயே நின்றுள்ளது. இதனால் எமர்ஜென்சி அலாரம் ஒளித்ததையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் எமர்ஜென்சி சாவியை கொண்டு லிஃப்டை திறந்து அதில் இருந்தவர்களை மீட்டனர். அளவிற்கு அதிகமான நபர்கள் ஏறியதால் லிஃப்ட் பழுதாகியிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் பழுது நீக்கும் பணி நடைபெற்றது.