நீலகிரி மாவட்டம் குன்னூரில் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக நகராட்சி வாகன ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நகராட்சியில் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்தவர் சேகர். இவர், மதுபோதையில் வாகனத்தை ஓட்டி சாலையோரம் நின்ற நபர் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் சிக்கி மேரி டயானா மற்றும் ரோஜி ஆகியோர் காயமடைந்த நிலையில், சேகரை சஸ்பெண்ட் செய்து நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில் விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.