தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் சொத்து தகராறில் இரும்பு கம்பியால் தாயை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். ஆடுதுறை பகுதியை சேர்ந்த ஸ்டாலின் - பிருந்தா தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பிருந்தாவுக்கு குத்தாலத்தை சேர்ந்த சங்கர் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டு அவருடனே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் உயிரிழந்த நிலையில், பிருந்தா தனக்கும் சொத்தில் பங்கு இருப்பதாக கூறி மூத்த மகன் அருண்குமாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தாயை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார்.