காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தெரு நாய்களின் அட்டகாசத்தை வீடியோவாக எடுத்து, சிடி ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேரடி தெருவில் ரேஷன் கடை, சத்துணவு கூடம், காவலர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிவதாகவும், அவை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் அச்சுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.