நெல்லையில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. காலை நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், சிறிது நேரத்திற்கு பிறகு கரு மேகங்கள் சூழ்ந்து காற்றுடன் மழை பெய்தது. கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, டவுன், முருகன் குறிச்சி மற்றும் புறநகர் பகுதிகளான சுத்தமல்லி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.