சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதியை அமைச்சர்கள் ஏ.வ. வேலு, சேகர் பாபு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தமுக்கம் மைதானம் முதல் ஆழ்வார்புரம் ஆற்றங்கரை வரை உள்ள பகுதிகளில் சாலையின் நடுவே செல்லும் ஒயர்கள், மேம்பால பணிகள், சாலையின் ஆங்காங்கே கட்டுமான பொருட்கள் வைத்திருக்கும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மாநகராட்சி மேயர், ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடனிருந்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்குவது மே 12 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.