மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மத்தியில், ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், சுதந்திரத்திற்காக தமது சமூகத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.