மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளில் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன், நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆறாம் நாளான இன்று, தங்கச் சப்ரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை உடன் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருள, மேளதாளங்கள் முழங்க அன்னை மீனாட்சியும் நான்கு மாசி வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.