கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் அருகே அனுமதியின்றி கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் நோய்த்தொற்று தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மத்தூர் ஏரிக்கரையோரப் பகுதியில் திறந்தவெளியில் டன் கணக்கில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அதில் உள்ள கட்டுத்துணிகள், ஊசி மருந்து, கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவை சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதோடு, அவ்வழியே மேய்ச்சலுக்காக செல்லும் கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.