மயிலாடுதுறை அருகே நடைபெற்ற அமுதுபடையல் விழாவில் குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் மண்டியிட்டு மடிப்பிச்சை எடுத்து குழந்தைகளுக்கு ஊட்டி, தாங்களும் உண்டனர். மன்னம்பந்தல் மேதா தட்சிணாமூர்த்தி கோவிலில் அமுதுபடையல் விழாவையொட்டி, மாவால் செய்யப்பட்ட பிள்ளை சீராளனை ஊர் முக்கியஸ்தர்கள் நடன விநாயகர் ஆலயத்தில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து ஆலயத்தை வந்தடைந்தனர்.