சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கட்டுக்குடிப்பட்டியில் செல்வ விநாயகர், மகாமாரியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, அம்மை நோயை விரட்டும் வினோத வழிபாடு நடைபெற்றது. பேத்தப்பன் வேடமிட்டு கோழி இறகுகளை செருகிய வாப்பெட்டியை தலையில் கவிழ்த்தும், கோழி இறகு மீசையுடன் கையில் உலக்கையோடும் அழைத்து வரப்பட்ட பேத்தப்பன், கோவிலை சுற்றி வந்து அம்மை நோயை விரட்டும் வழிபாடு நடைபெற்றது.