நண்பர்கள் போல் நாடகமாடி கொடைக்கானலுக்கு வரவழைத்து பெண்ணிடம் 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த மூவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி அபிராமி நகரை சேர்ந்த அனிதா என்பவருக்கு ஜி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள சகோதரன் வீட்டுக்கு அருகே வசித்து வரும், நந்தினி, லாவண்யா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அனிதா அணிந்திருக்கும் நகைகளை திருட நினைத்து இருவரும் திட்டம் தீட்டி, கொடைக்கானலை சுற்றிப்பார்க்க குழந்தைகளுடன் அனிதாவை வரவழைத்தனர். இதனை தொடர்ந்து, அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதிக்குள் நுழைந்த நந்தினியின் கள்ளக்காதலன் சாந்தகுமார் மிரட்டி அனிதாவிடம் நகைகளை பறித்து சென்றான்.