கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரசவ வார்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாப்பாளையத்தை சேர்ந்த கண்ணம்மாள் தனது மகளை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்து கவனித்து வந்தார். இந்நிலையில் கழிவறைக்கு சென்ற கண்ணம்மாள் நீண்ட நேரமாக வராததால் அவரது மகள் ரோஜா, மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் கழிவறை கதவை உடைத்து பார்த்தபோது கண்ணம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.