சென்னையில் வைர வியாபாரியை கட்டிப் போட்டு 32 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 பேர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த வைரவியாபாரி சந்திரசேகரை, சந்தித்து நகை வாங்குவது போல் நடித்து கட்டி போட்டு விட்டு வைர நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பல், தூத்துக்குடி செல்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே சோதனையில் ஈடுபட்ட போலீசார், வைர வியாபாரியிடம் கொள்ளையடித்த ஜான் லாயட் , விஜய், ரத்தீஷ், அருண் பாண்டியராஜ் ஆகியோரை கைது செய்தனர்.