மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் வக்கீல் திருப்பதி ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வடமலையான், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 850 காளைகளும் 450 மாடு பிடி வீரர்களும் பங்கேற்ற நிலையில், காளைகள் முட்டியதில் மொத்தம் 43 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அரங்கத்திலேயே மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், மூன்று பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.