மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உரிய அனுமதி இன்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகமலை அடிவாரத்தில் நடைபெற்ற போட்டியில் 30-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்ட நிலையில், மேலக்கால், சோழவந்தான், கொடிமங்கலம், குருவித்துறை, தாராபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். இதில் சில இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டது.