Also Watch
Read this
By: Manigandan Raja

சுமார் 1 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை :
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏழாவது சொர்க்கம் என்று அழைக்கப்படுகின்ற வால்பாறை பகுதிக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 2000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செய்கின்ற நிலையில் காலை முதலே சுற்றறிக்கும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து இருந்தது.
இருப்பினும் இரவு 7:00 மணி அளவில் கொட்டி தீர்த்த கனமழையால் நனைந்தபடியே சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு குளிர்ச்சி நிலவியதை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்து செல்கின்றனர். இந்நிலையில் வால்பாறை பகுதியில் வரும் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வால்பாறை பகுதியில் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது இருப்பினும் மழை வரும் என எதிர்பார்க்காத நிலையில் கொட்டித் தீர்த்த கனமழையால்
ஆங்காங்கே பேக்கரிகளிலும் ஹோட்டல்களிலும் காத்திருந்தனர் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மழை நின்றவுடன் ஹோட்டல் மற்றும் பேக்கரிகளுக்கு சென்று வந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் இதனால் வால்பாறை வால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved