ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய கடல் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மண்டபம் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் வரை பாம்பனில் புதிய கடல் ரயில் பாலம் கட்டுவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து 101 தூண்கள் மீது 2078 மீட்டர் நீளம் கொண்ட ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, வெள்ளோட்டம் பார்க்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வரும் 2 ஆம் தேதி பாம்பன் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.