காவல்துறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்ததாக கைதான திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர், வருமான வரித்துறை அலுவலக ஊழியர்கள் மூவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.