தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விசாரணை கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி நவீன் என்பவருக்கு போலீஸார் பாதுகாப்பு அளிக்காததால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தப்பியதாக கூறப்படுகிறது.