வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வளத்தூர் கிராமத்தில் மது போதையில் பேருந்துக்கு வழிவிடாமல் சென்றதால் ஓட்டுநர் ஹாரன் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கீழ்பட்டி பகுதியை சேர்ந்த விஜய், கல்லை எடுத்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டார்.