திருவள்ளூர் மாவட்டம் கடப்பாக்கம், சிறு பழவேற்காடு பகுதிகளில் இந்திய உப்பு நிறுவனம் சார்பில் உப்பளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி, டிராக்டர் உள்ளிட்டவற்றை மக்கள் தடுத்து நிறுத்தினர். உப்பளம் அமைப்பதற்காக முதற்கட்டமாக 400-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் பணிகள் நடைபெற்றது. இதனிடையே உப்பளம் அமைத்தால் நிலத்தடி நீர் மாசடையும், விவசாயம் பொய்துவிடும், சுற்றுச்சூழல் மாசுபடும் என அப்பகுதி மக்கள் உப்பளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்தியதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.