கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்கிற பெயரில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதோடு, வீடியோ எடுத்த காவலரையும் தரக்குறைவாக பேசிய இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர். வடசேரி பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல தனியார் நிறுவனத்தின் முன்பு மதுபோதையில் ஆட்டம் போட்ட இளைஞர்களை எச்சரித்தும் கலைந்து செல்லாததால் காவலர் வீடியோ எடுத்தார்