தமிழ்நாட்டுக்கு விடிவு கிடைக்கும் என்றால், அதிமுக, பாஜக கூட்டணிக்கு ஓட்டுப்போடத் தயார் என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.