2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது தாய் தந்தையை இழந்து வேளாங்கண்ணியில் மீட்கபட்ட மீனா என்ற பெண்ணிற்கு கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தம்பதியினர் முன்னின்று திருமணம் செய்து வைத்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த போது ஏற்பட்ட சுனாமியில் இரு பெண் குழந்தைகள் மீட்கபட்ட நிலையில், அவர்கள் மீது தனி கவனம் செலுத்தி வளர்த்து வந்தார்.