தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே விவசாயியிடம் பண மோசடி செய்த, இந்து முன்னணி நிர்வாகிகளுள் ஒருவரை கைது செய்த போலீசார், தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர். எர்ணம்பட்டியை சேர்ந்த சந்திரபோஸ் என்பவரிடம், துணை வட்டாட்சியர் எனக் கூறி அறிமுகமான நபர் பட்டாவில் சிக்கல் இருப்பதாகக் கூறி ஒரு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த நபரை வட்டாட்சியர் என அறிமுகம் செய்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து சுமார் ஒரு லட்சத்தை பறித்து சென்றனர்