பெரம்பலூர் கோட்ட பொறியாளரை கண்டித்து, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர், அவரது அலுவலக வளாகத்தில் சமையல் செய்து சாப்பிட்டு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை பணியாளர்களுக்கு இரண்டாம் நிலை சாலை ஆய்வாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும், தகுதி அடிப்படையில் அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலராக பணி மாற்றம் செய்ய வேண்டும், பராமரிப்பு பணிகளுக்கான தளவாடங்கள், காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், இரு வழி பயணச்சலுகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோட்ட பொறியாளர் விதிமீறலில் ஈடுபடுவதாகக் கூறியும் இந்த போராட்டம் நடைபெற்றது.