கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மூலையூர், லிங்காபுரம், காந்தவயல், உளியூர், அம்மன்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் வாழை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், குலை வந்து சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனையடைந்த விவசாயிகள், இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.