Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். நீர்வீழ்ச்சியில் பாறைகள் முழுவதும் மூழ்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், தண்ணீர் குறையும் வரை தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது ஊத்தங்கரையில் உள்ள பாம்பாற்றுக்கு சென்று சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏரிகளுக்குச் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.