திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் திண்டுக்கல் புறநகர் பகுதிகளான தாடிக்கொம்பு, மறவபட்டி, உலகம்பட்டி, குளத்தூர், உண்டார் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனை தொடர்ந்து வானில் தோன்றிய இரட்டை வானவில் காண்போரை வெகுவாக கவர்ந்தது.