திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேவலாபுரம், வன்னியநாதபுரம், பைரபள்ளி, மிட்டாளம், பார்சனபள்ளி, கடாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே பயணித்தனர். வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.