தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழையால், சங்கர நாராயண சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், திருவேங்கடம் சாலை, திருவள்ளுவர் சாலை, தெற்கு ரத வீதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனிடையே சங்கர நாராயண சுவாமி கோவிலுக்குள் புகுந்த மழைநீரை, கோவில் நிர்வாகத்தினர் வெளியேற்றினர்.