Also Watch
Read this
By: Manigandan Raja

விடிய விடிய கொட்டிய கனமழை :
ராமேஸ்வரம் தீவில் விடிய விடிய கொட்டிய கனமழை; தேசிய நெடுஞ்சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர்; வாகன ஓட்டிகள் அவதி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் தீவு பகுதி முழுவதும் இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது இதனை அடுத்து ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்திற்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் மழைநீரானது குளம்போல் தேங்கி இருப்பதனால்.
பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்திலிருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் ஏதோ குளத்திற்குள் மூழ்கி செல்வது போன்று தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரில் ஊர்ந்து செல்கின்றது
இதற்கு சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.