கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கனரக லாரி தீப்பற்றி எரிந்ததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி சமயபுரம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கனரக லாரியின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதைக் கண்ட ஓட்டுநர், லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பித்தார்.