நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதல்முறையாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மக்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் இசை நிகழ்ச்சி உடன் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், கலந்து கொண்டு பாடல்களுக்கு ஏற்ப துள்ளல் நடனமாடி மகிழ்ந்தனர்.