கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொடர்ந்து 5வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த 2 வாரங்களாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்வில் டி.ஜே. நிகழ்ச்சி இல்லாத நிலையில் பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து, மீண்டும் டி.ஜே. கொண்டுவரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிகழ்வில் இளைஞர் ஒருவர் RAP ஸ்டையிலில் சங்க தமிழர்களின் வரலாற்றை பாடி அனைவரையும் ரசிக்க வைத்தார்.