வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியிருந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். அந்த வகையில் காலை முதலே வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், மாலை தீடிரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதே போல தருமபுரி மாவட்டம் பொம்மிடி சுற்றுவட்டார பகுதிகளிலும் ஆலங்கட்டி மழை பெய்தது.