திருவள்ளூரில் போலி முத்திரைத் தாள் மூலம் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்து விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் புகாரளித்து உள்ளனர். சிறுவானூர் ஊராட்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான 22 செண்ட் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து, அந்த நிலத்தை விற்பனை செய்யப்படுவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கையெழுத்து, அரசு முத்திரை, பத்திரம் என அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.