கரூரில் அரசு வேளாண் கல்லூரிக்கு கட்டடம் கட்டித்தர வலியுறுத்தி, மாணவ- மாணவிக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அரசு வேளாண் கல்லூரி, மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் படித்து வரும் நிலையில், கல்லூரிக்கு என உரிய இடம் ஒதுக்கி உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டடம் கட்டித்தர வலியுறுத்தி, மாணவ- மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி- கரூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.