தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,500 ஏக்கர் நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி, 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பேரணியாக சென்று பூதலூர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பாதிக்கப்பட்ட நெற்பயிகள் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கு எடுத்த போது, சித்திரக்குடி, வைரப்பெருமாள்பட்டி, புதுகல்விராயன்பேட்டை, குணமங்கலம், மருதகுடி, அய்யாச்சாமிபட்டி உள்ளிட்ட கிராமங்கள் விடுபட்டதாக கூறி மனு அளித்தனர்.