நீலகிரி மாவட்டம் உதகை சேரிங் கிராஸ் (charing gross) பகுதியில் கால் டாக்சி ஓட்டுநரை தாக்கிய கும்பலை கண்டித்து, ஓட்டுநர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சிறுவாணி சாலையை சேர்ந்த குரு பிரசாத் என்பவர் உதகைக்கு உபர் கால் டாக்சி ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது சேரிங் கிராஸ் பகுதியில் புக் செய்தவரை, பிக்அப் செய்ய சென்றபோது அங்கிருந்த 13 பேர் கொண்ட கும்பல் அவரை கொடூரமாக தாக்கியது. மேலும் கோவையில் இருந்து இங்கு வந்து நீலகிரியில் ஆட்களை ஏற்றிச்செல்லக்கூடாது என கூறி அக்கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.