சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் மும்பை சைபர் கிரைம் போலீஸ் எனக் கூறி, ஓய்வுபெற்ற கல்லூரி விரிவுரையாளரிடம் 38 லட்ச ரூபாயை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா நகரை சேர்ந்த பிஜாய், மோசடி மூலம் கிடைத்த பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததும், இதே பாணியில் பல்வேறு நபர்களிடமும் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.